ஒரு தடவை பெரியார் திடலுக்குச் சென்ற இளையராஜா, ஒடுக்கப்பட்ட சமூகங்கள் உட்பட திராவிடர்களின் உரிமைக்காகப் போராடிய தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கக் கூட மறுத்துவிட்டார். பரவாயில்லை. அப்படியானால் அந்த மரியாதை “அவாள்”களிடம் இருந்தாவது கிடைத்ததா? இல்லை! மாறாக தீட்டுக்குரிய சூத்திரனாகத்தானே காஞ்சி மடத்தலைவர் பார்த்தார்.

மதுரை ஆதினம், காஞ்சி மடத்தலைவர் ஜெயேந்திரரை இயேசு, நபி என்று புகழ் பாடியபோது, “இயேசு அவதாரம், நபி அவதாரம் என்றெல்லாம் மதுரை ஆதீனம் பேசினார். நீங்கள் யாருடைய அவதாரமாகவும் இருக்க வேண்டாம். பெரியவாளாகவே இருங்க” என்று இளையராஜா ஜெயேந்திரரைப் பற்றி பேசி காஞ்சி சங்கர மடத்துக்கும் தனக்கும் உள்ள நெருக்கத்தை உணர்த்தியதாக ஒரு வார இதழ் செய்தி வெளியிட்டு இருக்கிறது.